இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் எனவும் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில் பலமுறை நீட்டிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று பெரும்பாலானூர் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி தங்களின் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தனர். ஆதாருடன் நினைக்காமல் உள்ள பான் கார்டு இன்று முதல் செயலற்றதாகிவிடும். வரி சேவை மற்றும் வங்கி கணக்கு என பான் கார்டு இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.