சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது.

ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார் எண்ணை எங்களிடம் பதிவு செய்தால், மாதம் ரூ.500 வரும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த மூதாட்டி ஆதாரை எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். இதை பயன்படுத்தி, அந்த பெண் தங்க நகை, ரூ.20000 பணத்தை திருடி சென்றுள்ளார். எனவே, தெரியாத நபர்கள் கூறுதை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.