இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்று பலருக்கும் எஸ்எம்எஸ் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் தவறுதலாக அந்த லிங்கை கிளிக் செய்தால் அவ்வளவுதான். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்துமே காணாமல் போகிறது. அது எங்கு போகிறது? என்று கண்டுபிடிக்க முடியாது. இந்த பட்டியலை நீங்களும் இணைந்து  விடாமல் ஜாக்கிரதையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது. இது போன்ற எஸ்எம்எஸ் அனுப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்களில் இருந்து சிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.