விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியலான பாரதி கண்ணம்மா சென்ற வாரத்தோடு நிறைவுபெற்றது. இந்த நிலையில் தற்போது இத்தொடரின் 2ஆம் சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. புரோமோவில் காட்டப்பட்டது போன்று 2ம் சீசன் கிராமத்து பின்னணியில் தான் உருவாகி உள்ளது. இதில் பாரதி ஒரு பெரிய பணக்கார வீட்டின் பிள்ளையாக இருக்கிறார். அவரது 25 ஆம் பிறந்தநாளை கொண்டாட ஊரில் உள்ள மொத்த முக்கியஸ்தர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் பாரதி அவரது அத்தை மகன் பேச்சை கேட்டு காலையிலேயே மதுபோதையில் தான் அனைவரையும் பார்க்க வருகிறார்.

அதனை பார்த்து அவரது அம்மா அதிர்ச்சியடைகிறார். இதற்கிடையில் பாரதியின் அப்பா இறந்துவிட்ட நிலையில், பாரதியும் இப்படி இருப்பதை பார்த்து அவர் வருத்தத்தில் உள்ளார். மற்றொரு புறம் ஹீரோயினி சென்ட்ரல் ஜெயிலில் தண்டனை காலம் முடிந்து வெளியில் வருகிறார். இவர் பெயர் சித்ரா ஆகும். சிறைச்சாலையில் ஒரு பெண் கஞ்சா விற்பதை பற்றி புகார் கூறியதால், ரிலீஸ் ஆகும் சித்ராவை கொலை செய்ய வெளியில் ஆள் வைக்கிறார் அவர்.

சித்ரா ஜெயிலிலிருந்து வெளியில் வந்து ஒரு பேருந்தில் செல்லும் போது அவரது அருகே கண்ணம்மா வந்து அமர்கிறார். பின் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். அதாவது, கண்ணம்மா அவரது வாழ்க்கையை குறித்த அனைத்து விஷயங்களையும் சித்ராவிடம் சொல்கிறார். இதற்கிடையில் ஜெயிலில் உள்ள வில்லி அனுப்பிய ஆட்கள் வந்து சித்ராவுக்கு பதில் கண்ணம்மாவை கொலை செய்துவிடுகின்றனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைகிறார் சித்ரா. அதனை தொடர்ந்து சித்ரா தான் கண்ணம்மாவாக மாறி நடிக்க போகிறார். ஆகவே இப்படிதான் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கதை இருக்கப்போகிறது என சொல்லப்படுகிறது..