
தமிழ்நாட்டில் வாழும் வட மாநில தொழிலாளி ஒருவர் பாணி பூரி கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஜிஎஸ்டி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. தற்போது அந்த நோட்டீஸ் இணைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் 2023 முதல் 24 ஆம் ஆண்டில் மட்டுமே இவரது வங்கி கணக்கிற்கு ரூபாய் 40 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் வரவு வந்துள்ளது.
டிசம்பர் 17 204 ஆம் ஆண்டு தேதியிட்ட அந்த நோட்டீஸில் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு 70ன் கீழ் நேரில் ஆஜாராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த தொழிலாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பண பரிவர்த்தனைகள் ரேசர் பே மற்றும் போன் பே மூலமாக நடந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதோடு வரும்பை மீறியத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் பின்னரும் ஜிஎஸ்டி பதிவு செய்யாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நோட்டீஸ் எந்த அளவு உண்மையானது என்றும், அந்த பானி பூரி கடைக்காரர் எந்த மாவட்டத்தில் கடை வைக்கிறார் வைத்திருக்கிறார் என்ற விவரமும் நோட்டீஸில் இல்லை.