விருதுநகரில் டாக்டர் நரேஷ்குமார்-டாக்டர் சித்ரகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விஷாலினி ஹைதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை விஷாலினி கண்டுபிடித்தார். இதனால் பிரதமர் மோடி காணொளி மூலம் விஷாலினிக்கு பால புரஸ்கார் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கி பாராட்டியுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு அனுப்பி வைத்த விருது, சான்றிதழ், பதக்கம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாணவிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.