அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  மக்களை ஏமாற்றுவதற்காக தான் தி.மு.க இன்று ஆட்சியில் இருந்து…. மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வருங்காலத்தில் அண்ணா தி.மு.க ஆளுகின்ற இடத்தில் வருகின்றது.  முதலமைச்சராக எடப்பாடி வர இருக்கின்றார். அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் வர இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலே ஒரு கூட்டணி அதற்குப் பெயர் ”இந்தியா கூட்டணி” கிடையவே கிடையாது…  அது இத்தாலிக் கூட்டணி. இந்திய கூட்டணி என சொல்லவே கூடாது. அது இத்தாலி கூட்டணி. எடப்பாடி தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி…  அமையப் போகின்ற கூட்டணி தமிழ்நாடு கூட்டணி. எடப்பாடி தலைமையில் அமைகின்ற கூட்டணி தமிழகத்தை வளமான நாடாக ஆக்க  உண்மையாக போராடக்கூடிய…. உழைக்கக்கூடிய… அத்தனை கட்சிகளும் எடப்பாடியார் பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர்.

சைனா வெடியைகொண்டு வந்து இறக்குவதற்காக… சிவகாசி வெடியை முடக்குவதற்க்காக டெல்லியிலே மாசு வருகிறது. பட்டாசால் மாசு வருகின்றது என்று சொல்லி கோடி கோடியாக சைனாகாரன் கிட்ட பணத்தை வாங்கி, மிகப் பெரிய சதி அண்ணா தி.மு.க ஆட்சியிலே பின்னப்பட்டது. சைனா பட்டாசு இந்தியாகுள் வருவதை தடுத்த கட்சி அண்ணா தி.மு.க.

இன்று என்ன நடக்கிறது ? எங்க பாத்தாலும் ரெய்டு.  பட்டாசு கடை நடத்த முடியுதா ? கலாச்சாராயம் காய்ச்சுவது போல்…  பின்னாடி ஓடிட்டு இருக்காங்க. ஏன் ரெய்டு பண்றீங்க ? எங்கே நடக்கக் கூடியது தான் விபத்து. இந்த கந்தக பூமியில் உழைக்கின்ற வர்க்கத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்களை இன்னைக்கு இந்த அரசு வஞ்சிக்கின்றது.  ஒட்டுமொத்த பட்டாசு தொழிலே நீங்க அழிக்க நினைத்தால் அதை விடவே மாட்டோம் என தெரிவித்தார்.