தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் கூறியதாவது, நான் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் சேர்ந்து டூர் சென்றிருந்தோம்.

நாங்கள் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது எங்களுடைய தோழிகளை இருவர் டீஸ் செய்தார்கள். இதனால் நாங்கள் அவர்களை அடித்து விட்டோம். அதன் பிறகு நாங்கள் அடித்த இருவரும் அவர்களுடைய நண்பர்கள் 40 பேருடன் அடுத்த ஸ்டேஷனில் ரயிலில் ஏறி எங்களை தாக்கினார்கள். இதில் எங்களுக்கு நல்ல அடி விழுந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர் கட்டுடன்  தான் ரயிலை விட்டு இறங்கினார்கள் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் தன்னை 40 பேர் வந்து தாக்கியதாக சொன்ன தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.