இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது கேரளாவைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து,  அந்த  பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்முக்குள் நுழைந்தனர்.

பணம் எடுத்துக் கொண்டிருந்த இளைஞரின் கண்களில் பெப்பர் ஸ்பிரே அடித்து, அவர் மீது தாக்குதல் நடத்தி ரூ.7 லட்சத்தை பறித்துச் சென்றனர். இறுதியாக இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.