இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் நடிகை ராஷ்மிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது “இந்த படத்தில் இரண்டு பாடல்களைத் தவிர்த்து எனக்கு பெரியதாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிந்து கொண்டுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் சார் உடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் சாரை நீண்ட காலமாகவே நான் ரசித்து வருகிறேன்” என்று அவர் கூறியிருந்தார். அவரது என் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.