மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும்.

எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாருக்கும் வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். காரியங்களில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். தொழில் போட்டிகள் குறையும். வருமானம் சீராக இருக்கும்.

சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும். யோசித்து செயல்படுவது நல்லது. பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று முயற்சி செய்துதான் முன்னேற வேண்டியதிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.