துலாம் ராசி அன்பர்களே..!
இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள்.

தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் கொள்ளுங்கள். ரகசியங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடன் சுமை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கேட்ட பண உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக உழைப்பின் காரணமாக சோர்வு உண்டாகும். காதலில் உள்ளவர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். பெரியவர்களை மதித்து நடங்கள். சக மாணவர்களிடம் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.