மகரம் ராசி அன்பர்களே..!
இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும்.

செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தனவரவு காலதாமதமாக வந்தாலும், கையில வந்துச்சேரும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

பயணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். அனைத்து விஷயத்திலும் முன்னேற்றம் உண்டாகும். விட்டுக்கொடுத்து சென்றால் சிறந்த நன்மைகளை அடைவீர்கள். குடும்பத்தின் நிதானமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். சில முக்கியமான முடிவுகளை மனைவியிடம் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.