மகரம் ராசி அன்பர்களே…!
இன்று குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் அதிகப்படியான செலவை தவிர்ப்பது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுதும் எச்சரிக்கை அவசியமாகும். அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. நீங்கள் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் குறைவாகவே தான் இருக்கும். ஆனால் இருந்தாலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும். இன்று உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இன்று உங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வந்து சேரும். உங்களுக்கு பொறுப்புக்கள் அதிகரித்து காணப்படும். இன்றைய நாள் சாதனை புரியும் நாளாக இருக்கிறது.

குடும்பத்தை பொருத்தவரை குடும்ப பொறுப்புகள் அதிகரித்தே காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும் நெருக்கம் அதிகரிக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு எதையும் செய்யக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.