அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சடலங்களின் சிதிலங்கள் பங்களாஜாப் என்ற கிராமத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 2 விமானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ஜெயந்த். இவர் தேனியில் உள்ள ஜெயமங்களம் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் ஹெலிகாப்டர் விபத்து கடும் பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்துள்ள நிலையில் அவர்களின் உடல்களை தேடுவதிலும் சிரமம் இருப்பதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.