தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஏராளமான கடைகள் இருப்பதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைப்பதற்காக போராடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.