நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காடியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 9ம் தேதி நாளை கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டைப் பொறுத்து வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் நிலையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://centralbankofidia.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.