உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.  ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.

அதாவது, கோவிட் தடுப்பூசியால் தனக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். அதில், “2-வது பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு, ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலைக்கு சென்றேன். அதன்பிறகு பயங்கரமான உடல்வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் சில நாட்களில் அது சரியாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.