தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ம் வருடம் வெளியாகிய “வெண்ணிலா கபடி குழு” படத்தில் நடித்ததன் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதையடுத்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய “விடுதலை” படத்தில் நாயகனாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். இத்திரைப்படம் கடந்த 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடத்தில் தான் தற்போது என்னுடைய அலுவலகம் உள்ளது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரி அளித்த பேட்டியில், நான் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் ஆர்யா நடித்த “கலாபக் காதலன்’ படத்தின் ஆடிசனுக்கு சென்றிருந்தேன். அங்கு நிறைய கூட்டம் இருந்தது. இதனிடையே சாப்பிடாமல் சென்றதால் மயக்கம் போட்டு விழுந்தேன். பின் என்னை அங்கு உட்காரவைத்து, எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தனர். நான் மதுரையில் இருந்து வாய்ப்பு தேடி வந்திருக்கிறேன் என சொன்ன பிறகு அனுப்பி வைத்தார்கள்” என்று தெரிவித்தார்.