சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் “பத்து தல”. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. வருகிற 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்து தல படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது சிம்பு பேசியதாவது, அன்பு காட்டினால் நான் அடிமையாகிவிடுவேன். இதனை அனைவரும் என்னிடம் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். அனைவரும் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்.

சிறுவயதிலும் சரி, தற்போதும் சரி ஊடக நண்பர்கள் தன்னிடம் அதிக அளவிலேயே அன்பை கொடுத்து வருகிறீர்கள். உங்கள் ஆதரவு தனக்கு எப்போதுமே இருக்கட்டும். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு எப்போதும் சிறப்பாக இசையமைத்துக் கொடுப்பார். அதேபோன்று பத்து தல படத்திலும் சிறப்பாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் என்று அவர் பேசினார்.