அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்கள் மற்றும் மர்ம பொருட்கள் பறந்து வரும் நிலையில், அதனை அமெரிக்க விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவிற்குள் கடந்த 4-ஆம் தேதி சீன உளவு பலூன் ஒன்று நுழைந்தது. அதை  அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. ஆனால் அந்த பலூன் வானிலை குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டது என சீனா தெரிவித்தது. இதனை தொடர்ந்து அலாஸ்கா மாகாண வான் எல்லைக்குள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இன்னொரு மர்ம பொருள் வந்த நிலையில் அதையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க-கனடா வான் எல்லை பகுதிக்குள்  மற்றொரு மர்ம பொருள் பறந்துகொண்டிருந்தது. இதையடுத்து அதுவும் அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த 3 சம்பவங்களால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வு வாடிக்கையாக நடந்து வரும் நிலையில், எலான் மஸ்க் இச்சம்பவத்தை எலியன்களுடன் தொடர்புபடுத்தியுள்ளார். இவர் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவர். இவர் இதை பற்றி நகைச்சுவையாக, கவலைபடாதீர்கள், எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.