இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியது. ஈரான் தயாரிக்கும் அணு ஆயுதங்களை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அமெரிக்கா ஈரானை தாக்கியது. ஆபரேஷன் மிட் நைட் ஹேமர் என்ற பெயரில் அமெரிக்கா 14 ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டை ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களுக்குள் ஊடுருவியது. இதனால் ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்க படைகளால் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறி வைத்த பிறகும் ரஷ்யா ஒதுங்கி நிற்பது ஏன் என்பதை குறித்து அந்நாட்டு அதிபர் வினாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது ரஷ்யாவும், ஈரானும் பலா சதாப்தங்களாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தாலும் ஏராளமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் இஸ்ரேலில் வசிப்பதால் மோதலில் நடுநிலை வசிக்க முயற்சிக்கிறோம் என்று கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இஸ்ரேல் இன்று கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாக உள்ளது, சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 2 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். நாங்கள் அதை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினார்.