விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தனுஷ் விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் தனது வீட்டிற்கு எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் தனது ஆம்புலன்ஸ் கண்ணாடியை தனுஷ் தான் உடைத்ததாக கூறி தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து மணிகண்டன் தனது நண்பர்களான பாலமுருகன், தினேஷ் ஆகியோருடன் இணைந்து தனுஷை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த தனுஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.