
மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்க்ராவ்லி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த தள்ளு வண்டியின் முன்னே தாயார் செல்ல பின்னால் இருந்து 6 வயது சிறுவன் தள்ளிச் செல்கிறான்.
அதாவது சிறுவனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டு 20 நிமிடங்களாகியும் ஆம்புலன்ஸ் வராததால் காலதாமதம் செய்ய வேண்டாம் என சிறுவன் மற்றும் அவருடைய தாயார் சேர்ந்து தள்ளு வண்டியில் வைத்து தன்னுடைய தந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அரசு மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
शायद मध्य प्रदेश की एंबुलेंस गरीबों के लिए नहीं है,
इसलिए मरीज़ को ठेले पर लिटाकर अस्पताल ले जाया जा रहा है!!वीडियो मे मरीज़ की पत्नी और बेटे ठेले को धक्का लगाकर ले जा रहे है!#MadhyaPradesh #सिंगरौलीhttps://t.co/7uIlBCDFZq pic.twitter.com/VD6N5nSUow
— Sadaf Afreen صدف (@s_afreen7) February 11, 2023