அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாளை (ஏப்ரல் 14) நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருக்கிறார். மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இச்செய்தியை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 15ம் தேதி முதல் மே மாதம் வரையிலும் மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதன் வாயிலாக புஸ்ஸி முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என பேசப்படுகிறது. இது தளபதியின் அரசியல் நகர்வாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. முன்பே விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.