
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது எப்படி ? மக்களவை, மாநிலங்களவை கட்சிகளின் குழு தலைவர்களை அழைத்து அவர்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக அரசு ஆலோசனை நடத்தும்.
அதேபோல இந்த முறையும் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
தெரிவித்திருந்தார். இந்நிலையில் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அரசு இமெயில் மூலமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கு அனுப்பி உள்ளது.