
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு, திருட்டு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அவருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகருக்கு 30 வருடங்களுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 30 வருடங்களுக்கு குறைக்க முடியாத ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் ஆவணப்பூர்வமாக அறிவியல் பூரணமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அவரது செல்ஃபோன் மிக முக்கிய சாட்சி, குற்றத்தின் போது செல்போன் Flight Mode-ல் இருந்ததற்கான ஆதாரங்களை ஏர்டெல் நிறுவன தொழில்நுட்பட்ட நிபுணர் வாக்குமூலமாக அளித்துள்ளார். இவ்வுலகில் வேறொரு நபர் என யாரும் இல்லை அப்படி பேசினால் அது நீதிமன்றம் அவமதிப்பு வழக்காகத்தான் மாறும். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது என்று கூறினார்.