தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.