கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவர் தனது வேலையை முடித்துவிட்டு, தனது நண்பருடன் பஸ்ஸில் வந்து இறங்கினார். அதன் பின் வீட்டிற்கு நடந்து சென்றார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, காட்டு யானை அவர்களை வழிமறித்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தப்பி ஓடினர். ஆனால் அந்த யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது. இதில் அவரது உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அவரது உடலை வீடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் மக்கள் உடலை கொடுக்கவில்லை. இது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டதற்கு வனவிலங்குகள் தாக்குதல் அதிகமாகிவிட்டது.

இதைப்பற்றி பலமுறை வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளும் எந்த பயனும் இல்லை. இதற்கு காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் அகழிகள், வேலிகள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வருகிற 27ம் தேதி மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு உறுதி அளித்த பின்னரே போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு எல்தோஸின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.