அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு மாணவி பூமிகா 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி 2 தங்க பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.
அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி…. சாதனை படைத்த 4-ஆம் வகுப்பு மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!
Related Posts
வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…
Read moreஅடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…
Read more