
மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்த போதே பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. இது குறித்து கனிமொழி எம்பி-யிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
இன்னும் ஒரு படி மேலே சென்று பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்த கூடிய இடத்திலேயே அவர்களும் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் யார் என்பதையும் திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு எடுத்துக்காட்டுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.