அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் படி உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அதிகார வரம்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த பின்னும் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறி இந்த விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இபிஎஸ் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டது தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.