அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் அதிமுக பொது குழு விசாரணை நடைபெறுகிறது. தற்போது ஓபிஎஸ் சிறப்பு வழக்கறிஞர் வாதிடுகிறார்.

அவர் அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு பல்வேறு விதமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை நீக்கினால் பொதுக்குழு வழக்கில் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் தயார் எனவும், அவர் தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்ளுவார் எனவும் வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று கூறிவந்த ஓபிஎஸ் தற்போது திடீர் திருப்பமாக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.