தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய சொத்துக்கள் மொத்தத்தையும் இழந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார். இவர் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் வசித்து வரும் நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இவருடைய காலில் எலும்புகள் தெரியும் அளவுக்கு புண்கள் இருக்கிறது. இவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் தன்னை பராமரித்துக் கொள்ளவும் ஆளில்லாமல் இருக்கிறார். இதனால் தனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று ‌ கூறி   ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நடிகர் சூர்யா வி.ஏ.துரைக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி செய்தார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தயாரிப்பாளர் வி.ஏ துரைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரை சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிதாமகன் படத்தை ஹிந்தியில் எடுப்பதாக கொரிய இயக்குனர் பாலா தன்னிடம் 25 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் ஆனால் அந்த படத்தை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு தான் அந்த பணத்தை பாலாவிடம் கேட்டபோது நீங்கள் எனக்கு தந்தீர்களா என்று பாலா கூறிவிட்டாராம். மேலும் இதனால் தான் மிகவும் மன வேதனை அடைந்து உடைந்து போனதாகவும், அந்த பணம் இதுவரை வரவில்லை எனவும் கூறியுள்ளார்.