
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை அளித்த அரசு அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல விவசாயிகளுக்கு 2014 இல் இருந்து ஐந்தாண்டு காலம் இரண்டு முறை விவசாயிகள் தோட்டக்கலை வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை ரத்து செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.
அதேபோல சென்னை மெட்ரோ ரயில் ஒரே காலகட்டத்தில் சுமார் 62 ஆயிரம் கோடிக்கு அடிகல் நாட்டி சாதனை படைத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியையும் நாம் தான் செயல்படுத்தினோம். அதே மாதிரி கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் நிலையம் ஆரம்ப கட்ட பணி துவக்கியதும் அண்ணா திமுக அரசாங்கம்.
மின்சாரத் துறையில் சாதனை படைத்தோம். தடையில்லா மின்சாரத்தை கொடுத்தோம். போக்குவரத்து துறையில் 14 ஆயிரம் புதிய பேருந்துகளை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி தடையில்லா பயணத்தை கொடுத்தோம்.
இன்னைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் துறை வாரியாக பல்வேறு தேசிய விருதுகளை பெற்றோம். உள்ளாட்சியில் மட்டும் சுமார் 123 விருதுகளை பெற்றோம். போக்குவரத்து துறை விருதுகளை பெற்றோம், மின்சார துறையில் விருதுகளை பெற்றோம், கூட்டுறவு துறையில் விருதுகளை பெற்றோம், உணவு துறையில் விருதுகளை பெற்றோம், உயர்கல்வியிலே விருதுகளை பெற்றோம்.
ஆக இப்படி துறை வாரியாக இந்தியாவிலேயே திறமையான ஆட்சி செய்து அதிக தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதேபோல நீண்ட நெடிய நாட்களாக பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று அம்மாவுடைய அரசு நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கி தந்தோம்.
ஏழு கோட்டங்களை உருவாக்கித் தந்தோம். 27 வட்டங்களை உருவாக்கித் தந்து, மக்களுக்கு எளிய முறையில் சான்றிதழ்கள் பெறுவதற்கும் இன்றைக்கு பல்வேறு வேலைகளை செய்வதற்கு இந்த மாவட்டங்களை பிரித்தோம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விளைகிறேன் என தெரிவித்தார்.