பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குளிக்கும் டப்பில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார். இவருடைய மரணத்தில் இருக்கும் மர்மங்கள் இதுவரை நீங்க வில்லை. நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இல்லாவிடிலும் அவருடைய நினைவுகள் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீதேவி பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது கூறியுள்ளார். அதாவது நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் நடிகை ஸ்ரீதேவிக்கும் இரவு தூங்குவதற்கு முன்பாக அவருடைய அம்மா ஒயின் ஊற்றி கொடுத்து மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் ஸ்ரீதேவியும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். ஆனால் இறுதியாக ஸ்ரீதேவியின் வாழ்க்கை இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீ தேவி பற்றி குட்டி பத்மினி சொன்ன விஷயம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.