தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 12-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சாகுந்தலம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை சமந்தா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்ட போது போட்டோ கிராபர்கள் அவரை சூழ்ந்து ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் கண்களை மூடிய சமந்தா திடீரென டென்ஷன் ஆகி அங்கிருந்து வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.