தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிய பிரசாந்த் தொடர் தோல்விகளை சந்தித்து தற்போது தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார். தனது தந்தை இயக்கத்தில் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜா அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம் நடிகர் பிரசாந்துக்கு எப்போது திருமணம் என கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு அந்தகன் திரைப்படம் வெளியான அடுத்த மாதமே திருமணம் என அவர் தெரிவித்துள்ளார்.