சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நடிகை தான் நயன்தாரா. ஆரம்பத்தில் ஹோம்லி வேடங்களில் நடித்த வந்தவர் பின்னர் கிளாமரில் அதிரடியாக களம் இறங்கினார். மேலும்  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து ஹீரோயினிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த நயன்தாரா அறம், இமைக்கா நொடிகள், மாயா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார். கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசபடவில்லை.

இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதன்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிமேல் கமர்சியல் படங்களில் நயன்தாரா அதிகளவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார் என எதிர்பார்க்கப்படுகின்றது.