தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டாகுஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டியில் தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் கேரள சம்பிரதாய புடவைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் ஓய்வு நேரத்தில் அவைகளை கட்டிக்கொண்டு போட்டோ எடுப்பேன்.

நான் அமிதாப்பச்சன் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களை அதிகமாக பார்ப்பேன். நான் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காதலித்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது கிரிக்கெட் பார்ப்பதற்கு நேரமே கிடையாது. என்னுடைய தந்தை ஸ்ரீ லட்சுமி என்று எனக்கு பெயர் வைத்தார். என் அம்மா ஐஸ்வர்யா என்ற பெயர் வைத்தார். மேலும் தற்போது ஐஸ்வர்யா லட்சுமியாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.