தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக மாறியவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு போராளி என்ற படத்தை மட்டுமே சசிகுமார் இயக்கினார். அதன் பிறகு தற்போது படங்களில் ஹீரோவாக மட்டுமே சசிகுமார் நடித்து வரும் நிலையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் அயோத்தி திரைப்பட விழாவில் இயக்குனர் சசிகுமார் நடிகர் சிம்பு பற்றி பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியான புதிதில் முதல் முதலாக திரை துறையில் இருந்து தங்களை பாராட்டியது சிம்பு தான் என சசிகுமார் உருக்கமாக கூறியுள்ளார். இதேபோன்று அயோத்தி திரைப்படம் வெளியானபோதும் முதன்முதலாக திரைப்படத்துறையில் இருந்து தங்களை பாராட்டியது சிம்பு தான் எனவும் சசிகுமார் கூறியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு பற்றி சசிகுமார் உருக்கமாக சொன்ன விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.