தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்குப் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்பு குறித்து பேசியுள்ளார். அதாவது நடிகர் சிம்புவுடன் ஒரே பள்ளியில் படித்தவர் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படத்தை இயக்கும்போது விக்னேஷ் சிவன் சொல்லும் வசனங்களை கேட்டு சிம்பு சிரித்துக் கொண்டே அவரை ஊக்குவிப்பாராம்.

அதன் பிறகு படங்களுக்கு பாடல்கள் எழுதுமாறு சிம்பு விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். தான் தற்போது ஒரு பாடலாசிரியராக இருப்பதற்கு காரணம் சிம்பு தான் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், ரெமோ, என்னை அறிந்தால், விக்ரம் வேதா போன்ற படங்களில் இடம்பெற்ற பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.