தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது ஒரு முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரான ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ராம்சரண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ஆஸ்கர் ரேசில் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ராம்சரண் கொடுத்த பேட்டியில் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார். மேலும் அது தொடர்பாக தற்போது ஹாலிவுட் இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று ராம்சரண் கூறியுள்ளார். இது ராம்சரண் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.