தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

நேற்று மும்பைக்கு செல்வதற்கு முன்பாக நடிகர் ரஜினி ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் சரவணனை சந்தித்துள்ளார். அதாவது ஏவிஎம் சரவணன் தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரை சந்தித்து நடிகர் ரஜினி நேரில் நலம் விசாரித்துள்ளார். அவருடன் எஸ்.பி முத்துராமன் சென்றிருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை ஏவிஎம் சரவணன் பேத்தி அருணா குகன் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.