தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் கடந்த 2015ம் ஆண்டு ‘மாரி’ என்ற திரைப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் பிரபலமானார். இந்த படம் அவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு தான் முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் ரோபோ சங்கர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அவர் நடிகர் தனுஷ் பற்றி மிக உயர்வாக பேசியிருந்தார். அதில் மாரி திரைப்படத்தில் தனுஷுடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. அவர் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர். அவர் என்னுடன் பழகும் போது ஒரு குழந்தையாகவே மாறிவிட்டார். அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் என்று கூறினார்.