தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமார். இவர் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியம் இன்று காலை உயிரிழந்துள்ளது நடிகர் அஜித் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் அஜித்தின் சுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் குமாரின் தந்தை மரணம் அடைந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அஜித் குமாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.