தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது நடிகர் என்பதை தாண்டி தனது கனவை நோக்கி பயணம் செய்து வருகிறார். அதாவது துபாயில் சமீபத்தில் நடந்த 24 மணி நேர கார் ரேசில் அஜித் கலந்து கொண்டார். இவர் அப்போட்டியில் தனது குழுவுடன் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த வெற்றியை தமிழகமே கொண்டாடியது. தற்போது வெளிநாட்டில் அடுத்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். துபாயில் போட்டியை முடித்த இவர் பல பேட்டிகள் கொடுத்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் முதல் முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது அதுவும் இரவு நேரத்தில். இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு மிகப்பெரிய ஊக்கமாக இது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருவதாக அவர் கூறினார்.