இன்னும் சில நாட்களே கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் இம்முறை தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே வீட்டில் ஏசி இருந்தால் இதனை சமாளித்து விடலாம். ஆனால் ஏசியின் ஆரம்ப விலையே 40 முதல் 45 ஆயிரம் வரை உள்ளது.

இனி கவலை வேண்டாம். 1699 ரூபாயில் நவீன போர்டபிள் ஏசி வாங்க முடியும். இது சிறியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இது தனித்துவமான முறையில் வேலை செய்யும். வெயிலை சமாளிக்க சிறந்த ஏசி இதுதான். மக்கள் வாங்க கோடை காலத்திற்கு முன்பே போட்டி போட்டு வருகிறார்கள்.

இது தண்ணீர் வழியாக குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முழு அளவு தண்ணீர் நிரப்பினால் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் வரை வேலை செய்யும். ஆனால் இது ஏர் கூலர் இல்லை. இது ஏசி போன்ற அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். யூஎஸ்பி மூலம் இது இயங்குகிறது. இதனால் மடிக்கணினி அல்லது சார்ஜர் வழியாக இதை மூலம் பயன்படுத்தலாம்.

ஆனால் மின் கட்டணத்தை பற்றிய கவலையும் தேவையில்லை. மிக குறைவாகத்தான் மின்சாரமும் செலவாகும். மேலும் இதன் அளவு சிறியதாக இருப்பதால் இதனை பயணத்தின் போது பவர் பேங்க் ஐ உபயோகித்து பயன்படுத்தலாம். இந்த போர்ட்டபிள் ஏர் கண்டிஷனரை அமேசானில் இருந்து மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும் மற்றும் வாங்க நினைப்பவர்கள் இதற்கு ரூபாய் 1699 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.