மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள காட்ஷில்லா கிராமத்தில் ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களது மூத்த மகள் பிர்தௌசி எம்ஏ வரை படித்துள்ளார். ஆனால் இவர்களது மகன் பர்வேஸ் ஆலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் படிப்பின் முக்கியத்துவத்தை குறித்து அறிந்த ஆயிஷாவின் மகள் பிர்தௌசி தன்னுடைய சகோதரனையும், தாயையும் படிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அவரின் ஊக்கத்தால் இவர்கள் இரண்டு பேரும் காட்ஷில்லாவில் உள்ள சித்திக் உயர்நிலைப் மதராஸா பள்ளியில் சேர்ந்து  இருவரும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிஷா பேகம், அவரது மகனும் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்கு பொதுமக்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.