காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தான் பிடித்த பல்கலைக்கழகமான கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயகத்திற்கு அவசியமான  கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. பெகாசஸ் உழவு மென்பொருளை பயன்படுத்தி அரசு என்னையும் வேவு பார்த்து வருகிறது.

மேலும் பெகாசஸ் உழவு செயலி பற்றி உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அதாவது அரசியல் கட்சி தலைவர்கள் பலரது  செல்போன்களில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் இருக்கிறது. என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது. அதனால் போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்” என கூறியுள்ளார்.